நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தூனேரி,தொட்டபெட்டா ஊராட்சிகளில் உள்ள, கோழிப்பண்ணை மற்றும் நெல்லிமந்து ஆகிய பகுதிகளில் புதிய பகுதி நேர நியாய விலைக் கடைகளை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ.இராசா, சுற்றுலாத் துறை அமைச்சர் கா. இராமச்சந்திரன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து ,குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்.
உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.கௌசிக் இ.ஆ.ப., அவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என். வினோத் குமார்.
No comments:
Post a Comment