நீலகிரி மாவட்டம் கட்டபெட்டு ஊரில் கட்டபெட்டு ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 20 க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபெற்ற 5s எனும் ஒரு அணியில் 5 பேர் விளையாடும் கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது.
பல கட்டங்களாக நடந்த போட்டிகள் நிறைவடைந்த நிலையில் ஜூன் 1 சனிக்கிழமை அன்று அறையிறுதி மற்றும் இறுதிபோட்டிகள் நடைபெற்றது.
அறையிறுதியில் ஒரசோலை அணியும் கெச்சிகட்டி அணியும் மோதியதில் கெச்சிகட்டி அணி வெற்றிபெற்றது.
ஏற்கனவே இறுதி போட்டியில் நுழைந்த சுண்டட்டி அணியும் கெச்சிகட்டி அணியும் இறுதிபோட்டியில் பலப்பரிட்சை நடத்தியது. பார்வையாளர்கள் புடை சூழ பரபரப்பாக நடைபெற்ற இறுதி போட்டியில்இரண்டு கோல்களை கெச்சிகட்டி அணி அடித்தது சுண்டட்டி அணி ஒரு கோல் அடித்தது.
பரபரப்பான இந்த ஆட்டத்தின் முடிவில் (2-1) 2க்கு1 என்ற கோல்கணக்கில் இறுதி போட்டியில் வென்ற கெச்சிகட்டி அணி கோப்பை வென்றது.
வெற்றி கோப்பையுடன் வந்த இளம் வீரர்களுக்கு கெச்சிகட்டி சுற்றுவட்டார ஊர் பொதுமக்கள் வாழ்த்து மற்றும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment