தந்தையர் தின வாழ்த்துக்கள்!
"தனக்கென சேமித்து வைக்காதவர் !
தனி மனிதனாய் இருந்தால் கூட
தன் குடும்பத்தை தூக்கி நிறுத்துபவர் "
தன் தந்தை !தனக்கு கொடுக்காத சொத்துக்களை தன் பிள்ளைகளுக்கு தன் உழைப்பால் சேமித்து வைப்பவர் !
நீருக்குள்இருக்கும் மீனை போல தந்தையின் குளிரும் தெரியாது !
தந்தையின் அழுகையும் தெரியாது!!
கண்கலங்காத குடும்பத்தின் காலை சூரியன்!
இயற்கை சூரியனுக்கு முன்னே! எழுந்து தன் குடும்ப வானத்திற்கு ஒளி கொடுப்பவர்!
வேலைக்குச் செல்லும் தந்தைக்கு காலில் செருப்பு இருக்கிறதோ இல்லையோ !என்று கூட பாராமல்.
பள்ளிக்குச் செல்லும் தன் குழந்தைக்கு செருப்பில்லையே என்று துடித்துப் போய் எடுத்துக் கொடுப்பவர்!
தான் விழுந்த குழிகளில் தன் பிள்ளைகள் விழுந்து விடக்கூடாது !என எச்சரிக்கையாய் விழித்திருப்பவர் !!
நம்மை கருவில் சுமந்தவள் அம்மா என்றால் !
நம்மை தன் மார்பிலும் நம் தாயை இதயத்திலும் சுமப்பவர் தந்தை !
கண்ணில் தென்படுகின்ற முதல் கடவுள் !
தாய் கோவிலாக இருந்தாலும் தந்தை தான் சிலையாக இருப்பவர்!
அனைவருக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துக்களை தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவின் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறோம்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment