நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகா உட்பட்ட ஆழ்வார்பேட்டைப் பகுதியில் வசித்துவரும் திரு.ஷானு என்பவர் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வரும் இவர், இன்று தனது சொந்த உழைப்பிலிருந்து அமரர் ஊர்தியை எந்த கட்டணமும் இன்றி குன்னூர் சுற்றுவட்டார மக்களுக்கு பயன்படும் வகையில் இந்த இலவச சேவையை தன் நண்பர்களுடன் துவங்கியுள்ளார்.
இந்த சேவை மக்களுக்கு முழுக்க முழுக்க இலவச சேவை என்பது குறிப்பிடத்தக்கது...
இந்த சேவையை சிறப்பாக செயல்படுத்தவும் எந்த நேரமானாலும் நாங்களும் உங்களோடு கைகோர்த்து மக்களுக்காக பணி செய்வோம் என்று உறுதியளித்தும்.
அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளை ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகள் இணைந்து திரு.ஷானு மற்றும் அவரது நண்பர்களை சந்தித்து வாழ்த்து கூறிவந்தோம்.... தமிழக குரல் இணையதள செய்தி பிரிவின் சார்பாகவும். நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவின் சார்பாகவும் அந்த தொண்டு நிறுவனத்திற்கு அமரர் ஊர்தியை வழங்கிய காவலர் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை பாராட்டுகளையும் இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment