தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சார்பில் மாநிலத் தலைவர் வழிகாட்டுதலின்படி உதகையில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி உதகை அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் சுரேஷ் ரமணா அனைவரையும் வரவேற்றார், ரோட்டரி நீலகிரி மண்டல ஆளுநர் மருத்துவர் சுரேஷ் பாபு தாங்கி சிறப்புரை ஆற்றினார் மேலும் குன்னூர் ஜே.சி. ஹில்ஸ் ஸ்பார்க் பொருளாளர் டேனியல் மற்றும் போபியோ பவுண்டேஷன் நிறுவனர் மோகன்ராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர் , நிகழ்வின் நிறைவில் தமிழ்நாடு தொண்டு நிறுவனம் கூட்டமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் தஸ்தகீர் நன்றி உரை ஆற்றினார்.
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment