நீலகிரி மாவட்டம் உதகை கூடலூர் செல்லும் சாலையிலும் கல்லட்டி செல்லும் சாலையிலும் பல்வேறு விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது கடந்த 17ஆம் தேதி இருசக்கர வாகன விபத்தில் இருவர் சிக்கிய நிலையில் வாகனம் ஓட்டியவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார் இந்த நிலையில் புதுமந்து காவல் நிலைய ஆய்வாளர்கள் குத்தாலிங்கம் மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் நெடுஞ்சாலை காவல் ரோந்து பணியிலும் புது ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் உதவி கூடலூர் செல்லும்
சாலையில் அனைத்து ரக வாகனங்களையும் சோதனை செய்தனர்.
இதில் சீருடை அணியாமல் சீட் பெல்ட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தும் அறிவுரை கூறியும் அனுப்பி வைத்தனர் மேலும் இரு சக்கர வாகனம் இயக்கி வந்த ஓட்டுநர் தலைக்கவசம் அணியாமல் அவர்களுக்கு அபராதம் விதித்தனர். வெளி மாநிலத்திலிருந்து குழுவாக வந்த இருசக்கர சுற்றுலா பயணிகளுக்கு மலைப்பகுதியில் பாதுகாப்பாக செல்லவும் அதிவேகம் தவிர்க்கவும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment