கன மழையால் பல பகுதிகளில் மண் சரிவு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 7 June 2024

கன மழையால் பல பகுதிகளில் மண் சரிவு





நீலகிரி மாவட்டம் உதகை நகரில் நேற்று  6:6:2024  வியாழக்கிழமை காலை. 11 மணி 20 நிமிடத்தில் இருந்து. பெய்த பேய் மழையால் பல பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது. உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து-பிருந்தா மருத்துவமனைக்கு செல்லும் சாலையில். மண் சரிவு ஏற்பட்டு சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டது. பரபரப்பான அந்த சாலையில் பொதுமக்களும் வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் உதகை நகரத்தில் உள்ள மேல்தலையாட்டிமந்து  பகுதியில் உள்ள. சாமி கிருஷ்ணன்  லிங்கராஜ் நாகராஜ் அசோக். ஆகியவர்களின்  வீடுகளுக்கு செல்லும். சாலையில் பெரிய அளவில் மண் சரிவு  ஏற்பட்டு சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக. அவர்கள் குடும்பத்தினர் அனைவரையும்  தலையாட்டு மந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்


. நீலகிரி மாவட்டம் தமிழக குரல்  இணையதள செய்திகளுக்காக. உதகை நகர தாலுக்கா செய்தியாளர். உதகை விஜயராஜ் மற்றும். நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad