உதகமண்டலம் நகராட்சி கவனத்திற்கு செடி புதர்கள் அதிகமாக இருக்கும் காரணத்தினால் உதகை ஜெயில் ஹில்பகுதியில் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளது. அலுவலகம் வளாகத்தில் மூன்று காட்டு பன்றிகள் தஞ்சமடைந்து இருந்தன. அவைகளை வீடியோவாக பதிவு எடுக்கும் பொழுது அந்த காட்டு பன்றிகள் அங்கிருந்த புதர்களுக்குள் புகுந்தன. பாதசாரிகள் மற்றும் அலுவலக பணிக்காக வருபவர்கள் மருத்துவமனைக்கு வருபவர்கள் அவ்வழியை தான் பயன்படுத்துகிறார்கள் மக்களின் பாதுகாப்பும் நலனும் கருதி அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்னர் செடி புதர்களை வெட்டி சீரமைத்திட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment