நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் குன்னூர் சாலையில் அமைந்துள்ள ஆவின் பாலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையினர் களஆய்வு மேற்கொண்டபோது ஆவின் பாலகத்தின் ஒருபுறத்தில் ஆங்கிலத்திலும் மறுபுறத்தில் தமிழ் ஒலிப்பெயர்ப்பிலும் மட்டுமே வைத்து தூய தமிழில் பெயர்ப்பலகை வைக்காதது கண்டறியப்பட்டது.
கள ஆய்வின்போது அரசாணையின் விதிகளுக்குட்பெற்று பெயர்ப்பலகையினைத் தமிழில் மாற்றுவதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென்றும் ஆவின் ஜங்ஷன் என்பதனை ஆவின் முனையம் என்று மாற்றி அமைக்கும்படியும் ஆவின் பொது மேலாளர் ம.ஜெயராமன் மற்றும் ஆவின் மேலாளர் இரா.சிவசங்கர் – கொள்முதல் மற்றும் இடுபொருள் ஆகியோரிடம் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்களால் வலியுறுத்தப்பெற்றது.
அதனைத் தொடர்ந்து, உடனடியாக ஆவின் முனையம் என்று தமிழில் பெயர்ப்பலகை மாற்றப்பெற்றது. அரசு நிறுவனங்கள் விரைந்து பெயர்ப்பலகைகளைத் தமிழில் மாற்றுவதைப் போல வணிக நிறுவனங்களும் தங்களின் பெயர்ப்பலகைகளைத் தமிழில் உடனே மாற்றி அமைத்து தமிழ்மொழியின் வளார்ச்சிக்கு உறுதுணையாக இருக்கவேண்டுமெனத் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ந. அருள் கேட்டுக்கொண்டுள்ளார்.
உதகமண்டலத்தில் ஆவின் பாலகத்தின் பெயர்ப்பலகை தமிழில் மாற்றப்பெற்றமைக்கு தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவரும் தமிழ் வளர்ச்சித் துறைக்கு மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment