இந்தியா நாடாளுமன்ற மக்களைவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 19 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. ஏழுகட்டங்களாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணும் பணி ஜூன் 4 ஆம் தேதி நாடு முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
நீலகிரி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் பணி உதகை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறும்.
முன்னேற்பாடு பணிகள் நடந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜூன் 4 ஆம் தேதி காலை 6.30 மணிக்கு வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் வர வேண்டும் எனவும் 7.30 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படும் எனவும் சரியாக 8 மணி முதல் வாக்கு பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக வரும் முகவர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment