நீலகிரி தொகுதியில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 473212 வாக்குகள் பெற்று ஆ. ராசா வெற்றி பெற்றார். இந்த நிலையில் 23 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவித்த நிலையில் பழுதான எந்திரங்களுக்காக 24வது சுற்று நடத்தப்பட்டது 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசங்களில் முன்னிலை பெற்றதால் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற ஆ.ராசா வாக்கு என்னும் மையத்திற்கு வந்தார்.
ஏற்கனவே 23 வது மற்றும் 24 ஆவது சுற்று முடிவுகளை அறிவிக்காமலே அவருக்கு சான்றிதழ் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது எனவே இறுதிச்சுற்று முடிவுகளை அறிவிக்க வேண்டும் மேலும் தபால் வாக்கு முடிவுகளை அறிவித்த பின்னர்தான் முறைப்படி அவருக்கு வெற்றி சான்றிதழ் வழங்க வேண்டும் என மற்ற கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் அவசர அவசரமாக மைக் மூலம் இறுதி சுற்று விவரங்கள் மற்றும் தபால் எண்ணிக்கை விவரங்களை அறிவித்து ஆ.ராசாவுக்கு வெற்றி பெற்ற சான்றிதழை வழங்கினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment