கடந்த ஒரு வார காலமாக உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில். கனமழையானது பெய்து வந்தது. முத்தோரை பாலாடா பகுதியில் அவ்வப்போது லேசான மழைப்பொழிவு இருந்து வந்தது. ஆனால் இன்று மதியம் 12 மணியளவில் பெய்யத் தொடங்கிய மழையானது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் சாலைகளில் பெருவெள்ளம் ஏற்பட்டது. விவசாய நிலங்களுக்கு போதுமான மழை கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக செய்தியாளர் வளன் விமல் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment