கோத்தகிரி- சிறப்பு மேளாவில் கூட்டுறவுக் கடன் வழங்கப்பட்டது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 16 June 2024

கோத்தகிரி- சிறப்பு மேளாவில் கூட்டுறவுக் கடன் வழங்கப்பட்டது.



நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதகமண்டலம் கோத்தகிரி வங்கி கிளையில்  15.6.2024 சனிக்கிழமை அன்று வைப்புத்தொகை சேகரிப்பு மற்றும் சிறப்பு கடன் மேளா நடைபெற்றது.


விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தனிநபர்கடன்,  அரசு சார்ந்த கடன், சேமிப்பு கணக்கு தொடங்குதல், வைப்பத்தொகை சேகரித்தல்,  சிறப்பு கடன்கள் வழங்குதல் போன்ற கடன் வழங்கல் சிறப்பு மேளா நடந்தது.


சிறப்பு மேளா கடனுக்கு சாதாரண வட்டி மட்டுமே கணக்கிடப்படும் என்றும் கூட்டு வட்டி கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதகமண்டலத்தின்  கோத்தகிரி கிளையில் சிறப்பு கடன் மேளாவில் பயனாளிகளுக்கு கடன் வழங்கப்பட்டது. இதில் கோத்தகிரி கிளையின் மேலாளர்  K. வனஜா, உதவி மேலாளர் சாந்தி மற்றும் இதர வங்கி பணியாளர்களுடன் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad