நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், தும்மட்டி பஞ்சாயத்திற்க்கு உட்பட்ட மடித்தொரை ஹட்டியின் நடுவில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ கோபாலகிருஷ்ணர்திருக்கோயில் ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா நாளை ( ஜூன்17) திங்கட்கிழமை நடைபெறுகிறது.
திங்கட்கிழமையான நாளை காலை 4.30 மணி முதல் ஹோமகுண்ட பூஜை, 6 மணி முதல் கும்பாபிஷேகம்
8 மணிக்கு அலங்கார பூஜை, 9 மணி முதல் சிறப்பாக அன்னதானம் நடைபெறுவதால் கும்பாபிஷேக விழாவில் அனைவரும் கலந்து கொண்டு அருள்மிகு ஶ்ரீ கோபாலகிருஷ்னர் அருள் பெற்றுச்செல்லுமாறு மடித்தொரை ஊர் மக்கள் மற்றும் விழா கமிட்டி சார்பில் வருக வருக என அழைப்பு விடுத்துள்ளார்கள்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment