கடந்த சில நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள சேரிக்கிராஸ் பகுதியில் உள்ள கால்வாய் பகுதியில் இருந்து சடலமாக மீட்டெடுத்தது நமது தமிழக குரல் இணையதள செய்தி பிரிவில் வெளியிட்டிருந்தோம் இந்நிலையில் இன்றைய தினம் அந்த நபரை உதகை தமுமுக மற்றும் அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லம் இணைந்து காவல்துறை உதவியோடு இன்று காந்தல் மயானத்தில் நல்லடக்கம் செய்தார்கள்.
இவர்களின் இந்த சேவை நீலகிரி மாவட்டத்தில் இதுபோன்று பல நபர்களை இவர்கள் காவல்துறை உதவியோடு கையாண்டு நல்லடக்கம் செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது அவர்களுக்கு சுற்றுவட்டார பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர் அவர்களுடன் சேர்ந்து தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் இந்நிலையில் இந்த இயக்கத்தினர் கூறும் பொழுது ஆதரவற்றோர் யாரும் இருக்கக் கூடாது... இருக்கும் நபர்களுக்கு நாங்கள் இருக்கிறோம்.. என்று கூறினார்கள் மேலும் காவல்துறை சார்பில் கூறும் பொழுது இவர் யார் என்பது இதுவரையிலும் தெரியாத நிலையில் இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக B1 காவல் நிலையத்தை அணுகுமாறு கூறினார்கள்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment