நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னேரிமுக்கில் உள்ள நீலகிரி முதல் ஆட்சியர் ஜான்சல்லிவன் அவர்களின் முதல் கலெக்டர் அலுவலகம் இருந்த அலுவலகம் தமிழக அரசால் புனரமைக்கப்பட்டு ஜான் சல்லிவன் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளது.
15.6.2024 சனிக்கிழமை அன்று ஜான் சல்லிவன் அவர்களின் 236 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கன்னேரிமுக்கு ஜான் சல்லிவன் அவர்கள் நினைவில்லத்தில் அமைந்துள்ள ஜான் சல்லிவன் அவர்களின் திருவுறுவ சிலைக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப.,அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, நீலகிரி ஆவணகாப்பகத்தால் தயார்செய்யப்பட்ட புத்தகத்தை வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் கன்னேரிமுக்கு ஊர் தலைவர் திரு.ஹாலாகவுடர், திரு.கக்கி சண்முகம், திரு.ஹத்தரை கிருஷ்ணா கவுடர், கோத்தகிரி (சிறப்பு நிலை) பேரூராட்சி துணைத்தலைவர் திரு.உமாநாத் போஜன், நீலகிரி ஆவணகாப்பகத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment