கடசோலை பள்ளியில் உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 13 June 2024

கடசோலை பள்ளியில் உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு.



நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கடசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


பள்ளி தலைமையாசிரியர் திரு.நஞ்சுண்டன் அவர்கள் தலைமை வகித்தார். சோலூர்மட்டம்  காவல் உதவிஆய்வாளர் திரு. வேலுசாமி மற்றும் முனைவர் திரு. தனசேகர் வழக்கறிஞர் ஆகியோர் முன்னிலை வகித்து குழந்தை தொழிலாளர்கள் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறினார்கள்.


காவல்துறையும் மற்றும் நீதித்துறையும் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு மற்றும் கட்டாய கல்வி ஆகியவைக்கு கல்வித்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்தனர்.


இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியர்களும் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழியேற்றதுடன், விளக்க உறையை கேட்டு பயனடைந்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad