பந்தலூரை அடுத்துள்ள நிலக்கோட்டை பென்னை என்கின்ற பகுதியில் காட்டு யானை தாக்கிய சம்பவத்தில் உயிரிழந்தார் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரபை ஏற்படுத்தியதால் மக்கள் வெளியே வர அச்சம்...
காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகாரித்தே வருகிறது பந்தலூர் கூடலூர் பகுதியில் தொடர்ந்து வனவிலங்குகள் மனித மோதல் ஒரு தொடர் கதையாகவே உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் அதே பகுதியில் பழங்குடியினரை ஒருவரை யானை தாக்கி உதகை அரசு மருத்துவ மனையில் சிகிச்சையில் உள்ளார். இரவு பகலென்று குடியிறுப்பு பகுதிகளில் உலா வயுகின்றன இப்படி வரும் யானைகள் சாலை குறுக்கே நின்று கொண்டு விளையாடுகிறது குழந்தைகளை போல்..
இன்னிலையில்பந்தலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை பென்னை பகுதியில் வசித்து வருபவர் சென்னன் இவர் வழக்கம் போல் கடைக்குச் சென்று வீடு தரும்பினர் அப்போது சாலை அருகே இருந்த பல்லத்திலிருந்து சாலையை கடந்து செல்லுகின்ற நேரத்தில் முதியவரை விரட்டி தாக்கியதில் சென்னன் வயது 75 சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இவர் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் யானையை விரட்டி விட்டனர் பின்பு வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு அரசு மருத்துவ மனையில் பிரோத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர் இந்த சம்பவத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வர அச்சப்படுகின்றனர்..
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment