நீலகிரி இருவழிப்பாதையானது இ-பாஸ் தொடரும். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 3 June 2024

நீலகிரி இருவழிப்பாதையானது இ-பாஸ் தொடரும்.



நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக ஒருவழிபாதையாக இருந்தது.கோடைவிடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 10 ல் திறப்பு, கோடை விழா நிறைவு, பொருளாதார மந்தநிலை ஆகிய காரணங்களால் நீலகிரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்தது மற்றும் ஒருவழிப்பாதை காலக்கெடு முடிந்தது.


ஆகையால் நீலகிரி பாதை இருவழி பாதையானது. மாவட்டத்தில் இருவழிப்பாதை ஆனதில் குன்னூர் பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் அதிகம் பாதிக்கப்பட்டது அவர்களே. ஜூன் 30 வரை நீலகிரி வர வெளி மாவட்ட வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை தொடரும்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad