நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நீலகிரிமாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு காவல் துணை கண்கணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் இன்று 13.06.2024( வியாழன்) கூடலூர் காவல் உட்கோட்டத்தில் பைக்காரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிளன்மார்கன் டீ எஸ்டேட் பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டங்கள் குறித்தும் சமூக நீதி, மனித உரிமை,சமத்துவம் ஆகியவற்றின் அவசியம், மதுவின் தீமைகள் , போக்குவரத்து விதிகள் குறித்தும் விழிப்புணர்வு கருத்துக்கள் எடுத்து கூறப்பட்டது.
கிளன்மார்கன் டீ எஸ்டேட் வாளாகத்தில் எஸ்டேட் பொதுமேலாளர் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள்,தொழிற்சாலை பணியாளர்கள்,சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு புள்ளியியல் ஆய்வாளர் திரு.குணசீலன் அவர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு.ஜான், திரு.நேரு , திரு.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.கிளென் மார்கன் தோட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment