நீலகிரி மாவட்டம் கடந்த நான்கு மாதங்களாக வறட்சியின் பிடியில் சிக்கித்தவித்தது வருணபகவானின் கருணையால் கோடைமழை பெய்தது.
உடன் ஒரு வளிமண்டல கீழடுக்குசுழற்சியால் மழையும் , கேரளாவில் பருவமழை முன்கூட்டியே ஆரம்பித்தது ஆகிய காரணங்களால் பரவலாக மழை பெய்தது.
கூக்கல்தொரை, உயிலட்டி,மசகல் ஆகிய பகுதிகளின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமான உயிலட்டி நீர் வீழ்ச்சியின் நீர்பிடிப்பு பகுதிகளின் நீராதாரம் பெறுகியதால் உயிலட்டி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீரினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சினிமா படப்பிடிப்புகள் அடிக்கடி நடைபெறும் உயிலட்டி நீர்வீழ்ச்சி ஆர்ப்பரித்து கொட்டும் ரம்மியமான காட்சிமுன்பு ஏராளமானவர்கள் வந்து செல்பி எடுத்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment