ஆண்டுதோறும் மே 31 அன்று உலக புகையிலை மறுப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இன்று கோத்தகிரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் தோழமை இயக்கங்கள் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் கோத்தகிரி போக்குவரத்து காவல்நிலையம் அருகே நடைபெற்றது.
புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் விளக்கி கூறினார்கள்.
கூட்டம் தொடங்குவதற்கு முன்பே கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து புகையிலை மறுப்பின் அவசியத்தை வலியுறுத்திய துண்டு பிரசுரங்களை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தை சேர்ந்த ஆசிரியர் ( NTC ) திரு. ராஜூ அவர்கள் வினியோகித்தார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு..
No comments:
Post a Comment