நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை,குன்னூர், கோத்தகிரி, கூடலூர், ஆகிய 4 தாலூக்கா அலுவலகங்களில் இன்று (ஜூன் 19,20,21)முதல் மூன்று நாட்களுக்கு ஜமாபந்தி நடைபெறுகிறது. குந்தா, பந்தலூர் ஆகிய தலூக்காவில் இன்றும், நாளையும் (ஜூன் 19,20)ஆகிய இரண்டு நாட்கள் ஜமாபந்தி நடைபெறும்.
கோத்தகிரி தாலூக்கா அலுவலகத்தில் குன்னூர் ஆர்.டி.ஓ. அவர்கள் தலைமையில் ஜூன் 19,20,21 ஆகிய மூன்று நாட்கள் ஜமாபந்தி நடைபெறுவதால் கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் அதற்க்கான ஏற்பாடுகளை செய்தனர்.
பொது மக்கள் இந்த மூன்று நாட்கள் நடைபெறும் ஜமாபந்தி முகாமில் கலந்து கொண்டு பயன்பெருமாறு தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment