எமரால்டு பகுதியில் கலைஞரின் 101 வது பிறந்தநாள் விழா ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திரு.உமா ராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு பகுதியைச் சுற்றிலும் 30க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன இந்த பகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் ஏராளமான உள்ளனர் இந்த எமரால்டு பகுதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையாகவும் உள்ளது இந்த பகுதியில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் பழம்பெறும் அரசியல்வாதியும் ஐந்து முறை தமிழகத்தை ஆண்டவருமான முத்தமிழறிஞர் கலைஞர் டாக்டர் முத்துவேல் கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்த தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் எமரால்டு பகுதியை சுற்றியுள்ள கிராமங்களான அண்ணா நகர் நேரு நகர் நேரு கண்டி போன்ற பகுதிகளில் கலைஞரின் திருவருவ படம் வைத்து அதில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது இனிப்புகள் வழங்கப்பட்டது இதில் அவரின் நல்லாட்சியும் அவரது சாதனைகளையும் எடுத்துக் கூறி உறுதிமொழியும் ஏற்கப்பட்டது இந்த விழாவிற்கு நீலகிரி மாவட்டத்தின் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திரு உமாராஜன் அவர்கள் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment