நீலகிரி மாவட்டத்தில் ஏழை மாணவ மாணவியர்கள் கல்வி பயில உதவிபுரிந்த நல் உள்ளங்கள் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 28 May 2024

நீலகிரி மாவட்டத்தில் ஏழை மாணவ மாணவியர்கள் கல்வி பயில உதவிபுரிந்த நல் உள்ளங்கள்




நீலகிரி மாவட்டம் மசினகுடியில் மக்களுக்காக அறக்கட்டளை நிறுவனர் தலைவர் தமிழ் வெங்கடேசன் தலைமை ஏற்பாட்டில் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள், கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.     


       மசினகுடி காவல்துறை ஆய்வாளர் சிவக்குமார் தலைமை காவலர் மகேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு நலத்திட்ட உதவிகள், கல்வி உதவித்தொகையை வழங்கி சிறப்பாக கல்வி பயில மாணவ மாணவிகளுக்கு நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்.       சமூக சேவகர் ஜெர்மினா, அரைஸ் அன்சை அறக்கட்டளை நிறுவனர் ஜாம்பவான் ஜெரால்ட் செய்தியாளர்கள் ஆல் இந்தியா ரேடியோ சரவணன் ராகம் டிவி ஜான் உள்ளாட்சி அரசு நவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த மிகவும் ஏழ்மையான மாணவன் பாசில் அலி திருப்பூரில் கல்வி பயில ஒரு ஆண்டுக்கான கல்லூரி கட்டணம் வழங்கப்பட்டது. 


 ஏழை மாணவ மாணவியருக்கு கல்வி பயல நிதி வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் தமிழக குரல் இணையதள செய்து குடும்பத்தின் சார்பாகவும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட செய்தி பிரிவின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் இந்த தருணத்தில் தெரிவித்து கொள்கிறோம்.   


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad