சுற்றுலாத்தலமான குன்னூரில் சுற்றுலா பயணிகளுக்கு பயன்படும் வகையில் சுற்றுலா மையங்களுக்கு எளிதில் வழிகாட்டும் வகையில் டி ஆர் குறியீடு கொண்ட வரைபடத்தினை நீலகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சௌந்தரராஜன் குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகில் வெளியிட்டார்.
காவல் துறை துணை கண்காணிப்பாளர் திரு குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஜே. சி. ஐ. ஹில்ஸ் ஸ்பார்க் மற்றும் நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பினர் செய்திருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment