சுற்றுலா பயணிகளின் தேவை சிறப்பு பேருந்தின் சேவை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 29 May 2024

சுற்றுலா பயணிகளின் தேவை சிறப்பு பேருந்தின் சேவை

 



   நீலகிரி மாவட்டத்தில் கோடை  சீசனையொட்டி ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்வதால் அங்கு கடந்த சில ஆண்டுகளாக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு சர்க்யூட் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  


குறைந்த கட்டணத்தில் அனைத்து சுற்றுலா தளங்களையும் பார்க்க முடியும் என்பதால் மேற்கண்ட பஸ்களுக்கு சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்படுகிறது அதிலும் குறிப்பாக ஊட்டியில் மலர் கண்காட்சி நடைபெற்ற மூன்று நாட்களில் மட்டும் தினமும் சராசரியாக 40 பஸ்கள் வரை சிறப்பு சர்க்யூட் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன அங்கு தற்போது சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைந்து காணப்படுவதால் பொதுமக்களின் தேவைக்கேற்ப சுமார் 15 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்கு இடையே நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு வருகின்ற 31ஆம் தேதி வரை சர்க்யூட் பஸ்களையும் இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இதனால் அனைத்து சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைவார்கள். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad