ஏஐடியுசி ஆஷா பணியாளர்களின் 2 வது மாவட்ட மாநாடு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 29 May 2024

ஏஐடியுசி ஆஷா பணியாளர்களின் 2 வது மாவட்ட மாநாடு



நீலகிரி மாவட்டம் உதகை நகரில் நேற்று 28:5:2024 உதகை நகரில் உள்ள ஏஐடியுசி கட்டிடத் தொழிலாளர்கள் சங்க அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11:மணிக்கு மாநாடு கலந்தாய்வுக்கூட்டம் நடைப்பெற்றது கலந்தாய்வுக் கூட்டத்தில் இன்று 29:5:2024:புதன்கிழமை நடக்கவிருக்கும் ஆஷாப்பணியாளர்களின் 2:வது மாவட்ட மாநாட்டை எப்படி எல்லாம் நடத்தலாம் என்று தோழர்களிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டது.


ஆலோசனை கூட்டத்திற்கு k. m ஆரி அவர்கள் தலைமைத் தாங்கினார் cpi மாவட்ட செயலாளர்   b. போஜராஜ் முன்னிலை வகித்தார் இக்கூட்டத்தில் cpi தாலுக்கா செயலாளர் விஜயராஜ் கலந்துக்கொண்டார். இக்கூட்டத்தில் ஆஷா பணியாளர்களின் மாவட்ட செயலாளர் தோழியர் ரீனா விளக்கவுரை ஆற்றினார்.அதில் இன்றைய தினம் நடக்க இருக்கும் ஆஷா பணியாளர்களின் 2:வதுமாவட்ட மாநாட்டை மிக சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்தி முடிக்கவேண்டும் என்று கலந்தலோசிக்கப்பட்டது இக் கூட்டத்தில் பல்வேறு தரப்பினர்களும் பேசினார்கள்  மாநாட்டின் கலந்தலோசனைக்கூட்டத்தின் இறுதியில் தோழியர் ரீனா நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.


நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையதள செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையதள செய்திப் பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad