நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் மற்றும் கூடலூரில் (உப்பட்டி) உள்ள தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள 600 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் 4 மணி வரை கீழ்க்கண்ட நாள் மற்றும் இடங்களில் நடைபெறுகிறது.
31.5.2024 - குன்னூர்
புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி
31.5.2024- பந்தலூர்
அரசு மேல்நிலைப் பள்ளி
6.6.2024 - உதகை
அரசு மேல்நிலைப் பள்ளி (முனிசிபல் அருகில்)
6.6.2024 - கூடலூர்
அரசு நடுநிலைப் பள்ளி ( வண்டிப்பேட்டை)
7.6.2024 - கோத்தகிரி
அரசு மேல்நிலைப் பள்ளி (தாலூகா அலுவலகம் எதிரில்)
7.6.2024 - குந்தா
அரசு மேல்நிலைப் பள்ளி மஞ்சூர்.
மேற்கண்ட இடங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு மாணவ மாணவிகள் பயன்பெறுமாறு தமிழக குரல் செய்தி நிறுவனத்தின் நீலகிரி மாவட்ட செய்திப்பிரிவு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment