ஆதார் உடன் பான்கார்டு இணைக்க 2023 ஆம்ஆண்டு மே 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
அதுவரை இணைக்காதவர்கள் அபராத தொகை செலுத்தி ஆதார் பான் இணைத்துக்கொள்ள ஓராண்டு காலம் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் இன்று (31.5.2024) கடைசிநாள் ஆகும்.
இன்று அபராதத்துடன் ஆதார் - பான் இணைக்க தவறினால் அவர்களது வங்கி கணக்குகளில் பரிமாற்றம் மற்றும் மானியங்கள் பெறுவது ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்படும் எனவும்.
வங்கி பரிமாற்றத்தில் அதிக அளவு வரிபிடித்தம்(TDS) செய்யப்படும் என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment