நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மாவட்ட நீதிபதி அப்துல் காதர் அவர்களின் வழிகாட்டுதலின்படி. மனித "ஆட் கடத்தல் " தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பிளக்ஸ் போர்டினை உதகை நகர ஏ.டி.சி. பேருந்து நிலையம் அருகில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் நீதிபதி லிங்கம் ஐயா அவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது.
மாவட்ட துணை ஆட்சியர், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் திருமதி பிரவீனா தேவி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை துணை இயக்குனர் ( பொ) திரு கீர்த்தி வேல் ராஜேஷ், சைபர் கிரைம் காவல் நிலைய, காவல் ஆய்வாளர், திரு. லட்சுமணதாஸ், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்
தமிழக குரல் செய்திகளுக்காக துணை ஆசிரியர் கே.எஸ்.டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment