இ -பாஸ் குறித்த புதிய உத்தரவு அறிவித்தார் உதகை வட்டார போக்குவரத்து அலுவலர் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 3 May 2024

இ -பாஸ் குறித்த புதிய உத்தரவு அறிவித்தார் உதகை வட்டார போக்குவரத்து அலுவலர்

 



மாவட்டத்திற்கு வரும் வாகனங்களுக்கு மே மாதம் 7 ஆம் தேதி முதல் இ-பாஸ் அவசியம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கவும் கூறியது .



      

 நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் நீலகிரி மாவட்ட பதிவு எண் டி என் 43 பெற்றிருந்தால் அந்த வாகனங்களுக்கு இ_பாஸ் தேவையில்லை.            


              வெளி மாவட்டங்களில் இருந்து வாகனங்களை வாங்கி நீலகிரி மாவட்டத்தில் வாகன உரிமையும் மாற்றம் செய்திருக்கும் பொதுமக்கள் வாகனத்தின் அசல் பதிவு சான்று காப்புச் சான்று மற்றும் நடப்பில் உள்ள புகைச்சான்று ஆகியவற்றுடன் உதகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை அணுகினால் ஆவணங்களை சரிபார்த்து உதகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தால் இபாஸ் வழங்கப்படும் என உதகமண்டலம் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.  


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad