கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் வாகன விபத்து.நீலகிரி மாவட்டம் மே 1 முதல் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டது.மாவட்ட காவல்துறையால் விழிப்புணர்வு ஒலிபரப்பு செய்யப்படுகிறது என நமது தளத்தில் நேற்று செய்தி வெளியிட்டோம்.
இந்த நிலையில் இன்று ஆந்திரா மாநிலத்திலிருந்து சுற்றுலா வந்த வாகனம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலை பவானிசாகர் காட்சி முனைக்கு முன்பு சாலையை தாண்டி சென்று விபத்தில் சிக்கியது .இதனால் குழந்தைகள் உட்பட 30 பயணிகள் காயமடைந்தனர்.
தகவல் அறிந்த கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் போக்குவரத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு சேர்த்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment