நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்கள் மே 7 முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் பெற்று வரவேண்டும் எனவும் உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு உத்தரவிட்ட நிலையில் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி அதற்க்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு ஆன்லைன் மூலம் இ-பாஸ் விண்ணப்பம் செய்பவர்களுக்கு உடனடியாக கிடைக்கும் வகையில் மென்பொருள் உருவாக்கப்பட்டது.
மே7 முதல் இ-பாஸ் பெற்ற வாகனங்கள் நீலகிரிக்கு வரும் நிலையில் கியூஆர் கோர்டு மூலம் அதற்க்காக பணி நியமனம் பெற்றவர்கள் சோதனை செய்து அனுமதிக்கின்றனர்.
இந்த நடைமுறை தெரியாமல் வரும் வாகனங்களுக்கு மேட்டுப்பாளையம் வனத்துறை சோதனை சாவடி அருகில் உதவி மையம் அமைக்கப்பட்டு இ-பாஸ் பெற்று நீலகிரிக்குள் நுழைய உதவிசெய்யப்படுகிறது.
மாவட்டத்தின் மற்ற பகுதி நுழைவுவாயில்களிலும் உதவிமையம் அமைக்கப்பட்டுள்ளது.
இ-பாஸ் உதவிமையத்தின் செயல்பாடுகளால் சுற்றுலா பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A . கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment