குன்னூர் - கோத்தகிரி சாலையில் உள்ள சிம்ஸ் பார்க் அருகே சாலையில் வாகனங்கள் நிறுத்த கட்டணம். சுற்றுலா வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.
இதுகுறித்து கோவையில் இருந்து ஊட்டிவந்த சுற்றுலாவாகன ஓட்டுநர் கூறும் போது நான் ஒரு வாடகை கார் ஓட்டுனர் கோவை மாவட்டத்தை சேர்ந்தவன்
நாங்கள் கோவையில் இருந்து சுற்றுலாபயணிகளை அழைத்து கொண்டு குன்னூர் மற்றும் ஊட்டி செல்வது வழக்கமாகும்
அப்படி நாங்கள் குன்னூர் சிம்ஸ் பார்க் செல்லும்போது சாலையோரம் நிறுத்துவத்துக்கு பார்க்கிங் வசூல் செய்வது மனவேதனை அளிக்கிறது
நாங்கள் வாகனம் வாங்கும்போது சாலையில் செல்வதற்கும் மற்றும் சாலையில் நிறுத்துவதற்கும் சாலை வரிகளை செலுத்திவிட்டுத்தான் வாகனத்தை வாங்கி வருகிறோம் .
சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதுக்கு ரூபாய் 50என்பது மிகவும் வருத்தமாக உள்ளது .
தயவு செய்து கட்டணத்தை ரத்துச்செய்யுங்கள் வாகன ஓட்டிகள் பிரச்சனைகளை தீர்த்துவையுங்கள் எங்களை வஞ்சிக்காதீர்கள் என கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என் வினோத் குமார்.
No comments:
Post a Comment