சாலிடரிடட் நிறுவனத்தின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிதாக தொழில் துவங்குவதற்க்காக மகளிர் குழு உறுப்பினர்களுக்கு அரிசி மாவு அரைக்கும் இயந்திரம்,இட்லி தோசை மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் தையல் இயந்திரம் ஆகிய பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது, இந்நிறுவத்தின் சார்பாக இக்கூட்டத்திற்கு திரு . வினோத் ஷெனாய் அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் இப்பகுதி ஒருங்கிணைப்பாளர் திரு. மணிகண்டன் அவர்கள் இக்கூட்டத்தை ஒருங்கிணைத்தார் மேலும் பயிற்ச்சியாளர் திரு ஆரோக்கியசாமி மற்றும் ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு ரவீந்திரன் அவர்கலும் பங்கேற்றிருந்தார்கள்.
பயிற்ச்சியாளர் திரு .ஆரோக்கியசாமி பேசுகையில் மகளிர் குழுக்கள் மற்றும் புதிதாக தொழில் முனைவோருக்கான பல்வேறு அமைப்புகளில் இருந்து கிடைக்கக்கூடிய சலுகைகள் பற்றி தெளிவான விளக்கங்களை வழங்கினார், இக்கூட்டத்தின் மூலம் கூடலூர், ஆரோடுபாறை, மரப்பாலம் மற்றும் குந்தலாடி ஆகிய பகுதிகளை சேர்ந்த 30 க்கும் மேற்ப்பட்ட பெண்கள் பயனடைந்தார்கள்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்தி பிரிவு.
No comments:
Post a Comment