நீலகிரி மாவட்டம் உதகை நகரில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. 73 வருடங்களாக இல்லாத வகையில் 29 டிகிரி செல்சியஸ் வெப்பம் இந்த மாதம் பதிவானது என்று ஆராய்ச்சியாளர்களும் சமூக ஆர்வலர்களும் கூறுகின்றார்கள்.
இன்று 3;5;2024 வெள்ளிக்கிழமை பிற்பகல் 12. 48 மணிக்கு மிதமான மழை பெய்தது மழை தொடர்ந்து பெய்யாமல் சுமார் 20 நிமிடம் மட்டுமே பெய்து பூமியை நனைத்தது. 20 நிமிடம் பெய்த அந்த மழையில் பொதுமக்களும் ஒரு சில சுற்றுலாப் பயணிகளும் குடைகளை பிடித்தபடி நடந்து செல்வதை பார்க்க முடிந்தது.
இந்த மழையானது பொருமழையாக பெய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் ஒரளவுக்கு குடிநீர் பற்றாக்குறை தீர்ந்து இருக்கும் என்றும் பொதுமக்கள் கூறினார்கள்
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திப்பிரிவு
No comments:
Post a Comment