நீலகிரி மாவட்டம் ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட செல்வபுரம் முதல் காவல் நிலையம் வரை செல்லும் சாலையானது மிகவும் மோசமடைந்து காணப்படுகிறது.இதனால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள்,முதியோர்கள்,கர்பிணி பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.சம்பந்தப்பட்ட நிர்வாகம் சாலையினை சீரமைக்காமல் பல்வேறு வனசட்டங்களை கூறி அப்பகுதி மக்களின் பொருளாதார முன்னேற்றத்தையும்,இயல்பு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக செயல்பட்டு வருவது அந்த ஊர் மக்களிடையே பெரிதும் மன வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.
தமிழக குரல் செய்திகளுக்காக தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment