உலகத் தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு மாபெரும் செங்கொடி பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 1 May 2024

உலகத் தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு மாபெரும் செங்கொடி பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.




நீலகிரி மாவட்டம் உதகை நகரில் இன்று மே1 உலகத் தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு மாபெரும் செங்கொடி பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.



தொழிலாளர் தின 138வது மே தின பேரணி உதகை காப்பி ஹவுஸ் சதுக்கத்திலிருந்து தொடங்கி மத்திய பேருந்து நிலையம் வரை  தொழிலாளர்கள் கோஷம் இட்டுக்கொண்டு பேரணியாக சென்றார்கள். பேரணி மத்திய பஸ் நிலையம் சென்றடைந்தது இந்த மாபெரும் ஊர்வலத்தில் ஏ ஐ டி யு சி யின் தொழிற் சங்கத்தினர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் ஏஐடியுசி சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்  சிஐடியு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள் இந்த மாபெரும் பேரணியை துவக்கி வைத்து தலைமை தாங்கியவர்கள் ஆஷா பணியாளர்கள் aituc  சங்க மாநில செயலாளர் தோழர் வசந்தகுமாரி சிஐடியு மாவட்ட செயலாளர் வினோத்குமார் அவர்களும் தலைமை ஏற்று பேரணி துவக்கி வைத்தார்கள்.

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர்  தோழர்  போஜராஜ்aituc உள்ளாட்சி பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ரகுநாதன் ஏஐடியுசி ஆஷா பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர்   தோழர் ரீனா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயளாலர் விஜயராஜ் இருதயராஜ் நாகராஜ் ராமகிருஷ்ணன் பிரதீப் மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணி ஏஐடியுசி போக்குவரத்து கழக தோழர்கள் நசீர் தியாகராஜன் செபஸ்டின் ராஜ் குட் நஸ் மற்றும் பண்ணை தொழிலார்களும் தாவரவியல் பூங்கா தொழிலாளர்களும் சுமார் 300 பேர்கள் கலந்து கொண்டார்கள் கூட்டத்தின் முடிவில் இறுதியாக போக்குவரத்து துறை ஏ ஐ டி சி யின் தோழர் செபாஸ்டியன் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

 

நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள  செய்திகளுக்காக உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இனையத்தள செய்திப்பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad