சக்திமலை வைகாசி விசாகம் 108 பால்குடம் & தீர்த்த காவடி ஊர்வலம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 22 May 2024

சக்திமலை வைகாசி விசாகம் 108 பால்குடம் & தீர்த்த காவடி ஊர்வலம்.



நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சக்திமலை அருள்மிகு முருகன் கோயிலில் வைகாசி‌ விசாகம் முன்னிட்டு டானிங்டன் ஶ்ரீ மகாசக்தி கணபதி ஆலயத்திலிருந்து 108 பால் குடம் மற்றும் தீர்த்த காவடி ஊர்வலம் பேண்டு வாத்தியங்கள் முழங்க பக்தர்களின் அரோகரா முருகா என்ற கோஷத்துடன் நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சக்தி மலை முருகன் கோயிலை அடைந்தது.



முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் அருளாசி பெற்றுச்சென்றனர்.


வைகாசி விசாக திருவிழாவிற்க்கான ஏற்பாடுகளை சக்தி சேவா சங்கத்தினர் மிக சிறப்பாக செய்திருந்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad