உதகைக்கு வரும் வாகனங்களுக்கு புதிய வழிகாட்டுதல் நெறிமுறை காவல்துறை அறிவிப்பு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 26 April 2024

உதகைக்கு வரும் வாகனங்களுக்கு புதிய வழிகாட்டுதல் நெறிமுறை காவல்துறை அறிவிப்பு

 



 1. கூடலூரிலிருந்து உதகைக்கு வரும் அரசு பேருந்து தவிர அனைத்து சுற்றுலா பேருந்துகள், வேன் மற்றும் மேக்சிகேப் வாகனங்களும் எச்.பி.எப். கோல்ப்ஸ் சாலை பகுதியில் நிறுத்தப்பட்டு அதில் வரும் சுற்றுலா பயணிகள் அரசு சுற்று பேருந்தை பயன் படுத்திக்கொள்ளலாம்.

2. மசினகுடியிலிருந்து கல்லட்டி வழியாக உதகை நோக்கி வரும் இலகு ரக வாகனங்கள் தலைகுந்தாமட்டம் கோழிப்பண்னை புதுமந்து வழியாக ஸ்டடீபன்சர்ச் வந்தடையும். அதில் தாவரவியல் பூங்கா செல்லும் சுற்றுலா பயணிகள் புதுமந்திலிருந்து வண்டிசோலை வழியாக தாவரவியல் பூங்கா வரலாம்.

3. கூடலூரிலிருந்து உதகை படகு இல்லம் மற்றும் கர்நாடகா பூங்கா வரும் சுற்றுலா பயணி வாகனங்கள் பிங்கர் போஸ்டிலிருந்து வலது புறம் திரும்பி காந்தல் முக்கோணம் வழியாக படகு இல்ல சாலை மற்றும் கர்நாடகா பூங்கா சாலையை அடையலாம்.

4. குன்னூரிலிருந்து உதகைக்கு வரும் அரசு பேருந்து தவிர அனைத்து சுற்றுலா பேருந்துகள், வேன் மற்றும் மேக்சிகேப் வாகனங்களும் ஆவின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து சுற்றுலா பயணிகள் அரசு சுற்று பேருந்தை பயன் படுத்திக்கொள்ளலாம்.

5. கோத்தகிரியிலிருந்து உதகைக்கு வரும் அனைத்து வாகனங்களும் கட்டபெட்டு சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு குன்னூர் வழியாக உதகை வந்தடையலாம்.

6. அத்தியாவசிய வாகங்கள் தவிர (பால், பெட்ரோலியம், சமையல் எரிவாயு) அனைத்து கனரக வாகனங்களும் 27.04.2024, 28.04.2024 மற்றும் கோடை விழாவான 01.05.2024 முதல் 31.05.2024 வரை காலை 0600 மணி முதல் இரவு 0800 மணி வரை உதகை நகருக்குள் அனுமதி இல்லை.

7.மேட்டுப்பாளயத்திலிருந்து உதகைக்கு வரும் அனைத்து வாகனங்களும் குன்னூர் வழியாக உதகைக்கும், உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக 27.04.2024, 28.04.2024 மற்றும் கோடை விழாவான 01.05.2024 முதல் 31.05.2024 வரை அனுமதிக்கப்படும்.

8. உதகை மார்கெட் வியாபாரிகள் மற்றும் கமர்சியல் சாலையில் கடை வைத்திருந்கும் உரிமையாளர்கள் மற்றும் கடைகளில் வேலை செய்யும் பணியாளர்கள் அவர்களது நான்கு சக்கர வாகனத்தை அவர்களது கடை எதிரே நிறுத்தக் கூடாது. அதற்கு பதிலாக இரு சக்கர வாகனத்தை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் N.வினோத்குமார் உடன் நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad