நீலகிரி மாவட்டம் வனப்பகுதிகள் சூழ்ந்த இடமாகும் இந்த ஆண்டு கோடை வெயில் முன்னதாகவே தொடங்கிவிட்ட காரணத்தினாலும் கோடை மழை வராத காரணத்தினாலும் கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் அதிக வெயில் காரணமாக மரங்கள் காய்ந்து இலைகள் உதிர்ந்து சாலையோரங்களில் உள்ளது ஏற்கனவே வனத்துறை மூலம் பிப்ரவரி மாதத்தில் தீத்தடுப்பு கோடு அமைக்கப்பட்ட நிலையில் தற்போது காய்ந்த இலைகள் சாலையோரம் அதிகமாக உள்ளது.
வெயிலின் தாக்கம் மற்றும் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்க்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால் உடனடியாக தீத்தடுப்பு கோடு அமைத்து வனப்பகுதியை காக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு
No comments:
Post a Comment