உதகையில் கோடை விழாவை முன்னிட்டு பாதை மாற்றம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 26 April 2024

உதகையில் கோடை விழாவை முன்னிட்டு பாதை மாற்றம்

 



ஏப்ரல் 27, 28 நீலகிரி ஒருவழி பாதையாக மாற்றம்.

கோடையில் சுற்றுலா பயணிகள் குவிந்ததை அடுத்து உதகையில் வாகன நெரிசல் அதிகரிப்பால் நகருக்குள் வரும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்ததுடன் மலை பாதையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களை ஒருவழி பாதையாக அறிவித்தது நீலகிரி மாவட்ட காவல்துறை .

மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வழியாக உதகை செல்லவேண்டும்.

உதகையிலிருந்து கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் செல்ல வேண்டும் என ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

இது  மே மாதம் முழுவதும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணிகளும் அதற்கேற்றாற்போல் தங்கள் பயண திட்டத்தை திட்டமிட்டு  மலை பாதையில் மித வேகத்தில் பயணித்து பயன்பெறுமாறு தமிழக குரல் செய்திநிறுவனத்தின் சார்பிலும் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பிலும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .

தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad