நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா நிகழ்வுகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
நீலகிரி மாவட்டத்தில் வருடம்தோறும் மே மாதத்தில் கோடை விழா நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் மற்றும் புவி வெப்பமடைந்ததால் கோடைமழை பொய்த்தது மழையின்றி நீலகிரியில் உள்ள அனைத்து அணைகளும் வறண்டதால் மின்சார உற்பத்தி நிறுத்தம் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது நிலத்தடி நீர் மட்டம் அதள பாதாளத்திற்கு சென்றதால் நகரில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு
இந்த நிலையை அறியாமல் சுற்றுலா பயணிகள் படையெடுப்பால் லாட்ஜ் மற்றும் காட்டேஜ்கள் அதிக விலை கொடுத்து தண்ணீர் வாங்கி சமாளிக்கும் நிலை ஏற்பட்டது.கடுமையான போக்குவரத்து பாதிப்பால் உள்ளூர் மக்கள் அவதிப்பட்டனர்.
சுற்றுலா பயணிகளை எந்த வித கட்டுமான அடிப்படையில் இத்தனை பயணிகளை நீலகிரி மாவட்டத்தில் அனுமதிக்கிறீர்கள் என கோர்ட் கேட்டது ஆகிய காரணங்களால் இந்த ஆண்டு கோடை விழாவை நடத்துவது குறித்து மாவட்ட நிர்வாக குழு கூட்டம் இந்த மாதம் நடத்தினால் முடிவு செய்யப்படும்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு
No comments:
Post a Comment