நீலகிரி மாவட்டம் உதகை நகரின் மத்தியில். அமைந்துள்ள அருள்மிகு திரு. மாரியம்மன் திருக்கோயிலில் வருடம் ஒரு முறை நடக்கும் திருத்தேர் விழா நேற்று 16 4 2024 செவ்வாய்க்கிழமை அன்று பக்த கோடிகளின் கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளத்தின் நடுவே திருத்தேர் உலா நடைபெற்றது. அம்மன் திருத்தேரானது மதியம் 2 மணிக்கு தனது நிலையை விட்டு புறப்பட்டு வீதி உலா வந்தது திருத்தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு எம் எஸ். லைன் வழியாக ஊட்டி காபி ஹவுஸ் சதுக்கம் வரை சென்று திரும்பியப் பிறகு லோயர் பஜார் வழியாக சென்ற பிறகு மெயின் பஜார் வழியே வந்து இன்று 17 4 2024. புதன்கிழமை காலை 7:15 மணிக்கு வந்து கோயிலை முன்னே தனது நிலையில் நின்றது
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவுக்காக உதகை தாலுகா செய்தியாளர் உதகை விஜயராஜ் உதகை நகர தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment