பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவித்ததில் இருந்து தொடர்ந்து பல நாட்களாக நீலகிரி மாவட்ட பாராளுமன்ற தொகுதிக்காக போட்டியிடும் நான்கு கட்சிகளும் மாறி மாறி தங்களுடைய கட்சிக்காக காலை முதல் இரவு வரை தினம் தினம் தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட்டு வந்தார்கள். ஆனால் இன்று 17 4 2024 புதன்கிழமை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
மேலும் இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு இரண்டு வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது மேலும் ஒவ்வொரு தொகுதிகளிலும் இரண்டு கட்சிகள் மூன்று கட்சிகள் நான்கு கட்சிகள் என்று தங்களுடைய கட்சிகளுக்காக பிரச்சாரங்கள் செய்து வந்தார்கள் அது இன்று மாலையுடன் முடிவதால். போட்டி போட்டுக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள் வருகின்ற 19.4.2024 வெள்ளிக்கிழமை அன்று ஒவ்வொருவரும் தம்முடைய ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக குரல் இனையதள செய்திப் பிரிவின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் .
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதளப் பிரிவுக்காக உதகை நகர தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment