அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் அரசு பள்ளி ஆசிரியர் வேண்டுகோள் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 19 April 2024

அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் அரசு பள்ளி ஆசிரியர் வேண்டுகோள்

 



நீலகிரி மாவட்டத்தில் அனைவரும் பாராளுமன்ற தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டும் எனவும் வாக்களிப்பதன் கடமையையும் தேர்தல் தினமான 

இன்று  அனைவருக்கும் அலைபேசி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்...


தேர்தல்2024


ஐனநாயகம் மீதான உங்களது

நம்பிக்கை இலட்சியங்கள்

மதிப்பீடுகள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கட்டும்.

-

நிரூபியுங்கள்

உங்களது வாக்கை விலை பேச முடியாது என்பதை.


நான் ஒருவன் வாக்களிக்காவிட்டால்

என்ன குடியா முழுகிவிடும் என எண்ணாதீர்கள்


தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சீட்டும்

விலை மதிப்பிட முடியாத பொக்கிஷம்


வாக்களிக்கும் கடமையை உதாசீனம் செய்யாதீர்


ஜனநாயகம் காப்பது உங்கள் கடமை


வேறு முக்கியமான வேலை இருக்கிறது

வாக்குச்சாவடி தொலைவில் உள்ளதே

தேர்தலைப் பற்றிய நல்ல கருத்தே இல்லை

என்றெல்லாம் சாக்குச் சொல்லாமல் - தேர்தலில் வாக்களியுங்கள்

-

உங்களது வாக்கு மறுப்பு

உங்களது தாய் நாட்டு மக்களுக்கு

நீங்கள் செய்யும் அப்பட்டமான துரோகம்.


எனது வாக்கை அளிக்க

வாக்குச்சாவடிக்குப் புறப்பட ஆயத்தமாகி விட்டேன்

-

மறக்காமல், காலையில், முதல் வேலையாக,

உங்களது வாக்கைச் செலுத்தப் புறப்படுங்கள்


தவறாமல் வாக்களியுங்கள்

உங்கள் வாக்கு தேசத்தின் பாதுகாப்பு ஜனநாயகம் வெல்லட்டும்.


கட்டாயம்_வாக்களியுங்கள்


மணிகண்டன் இத்தலார் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் . 



 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad