நீலகிரி மாவட்டம் உதகை நகரின் எட்டின்ஸ் ரோடு அருகில் ஸ்ரீ சாந்தி விஜய் பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் பின்புறம் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதி துளிர் காத்த அம்மன் கோயிலின் திருவிழாவும் கரக உற்சவ ஊர்வலமும் காலை வெகு விமரிசையாக மேளதாளங்களுடனும் ஆட்டபாட்டங்களுடனும் ஆரவாரங்களுடனும் நடைபெற்றது.
பக்த கோடிகள் சுமந்து சென்ற கரகம் ஆதி துளிர் காத்த அம்மனின் கோயிலில் இருந்து புறப்பட்டு திரு வேணுகோபால் சுவாமி கோயில் வழியே சென்று அருள் மிகு மாரிஅம்மன் காளி அம்மன் கோவிலுக்கு சென்று பின்பு துளிர் காத்த அம்மனின்சன்னதியை வந்தடைந்தது அதற்குப் பின்பு அம்மனின் அன்னதான பெருவிழா நடைபெற்றது இதில் பக்த கோடிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு அம்மனின் அன்னதானத்தை உண்டு மகிழ்ந்து சென்றார்கள் இந்த திருவிழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள் .
தமிழக குரல் செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment