நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மருத்துவமனை புதிய கட்டிட வளாகத்தில் கோத்தகிரி ரோட்டரி கிளப் மூலம் சிறுநீரக பிரச்சினை உள்ளவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை வழங்கும் கருவிகள் ஏற்கனவே பொறுத்தப்பட்டு சிகிச்சைகள் நடந்துகொண்டுள்ளது
இந்த நிலையில் இன்று கோத்தகிரி ரோட்டரிசங்கத்தின் இந்த டயாலிசிஸ் சிகிச்சை திட்டத்திற்கு ரூபாய் ஐந்து இலட்சம் நன்கொடை வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட கவர்னர் மாவட்டம் 3212 திரு. முத்து அண்ணாச்சி அவர்கள், மும்பையிலிருந்து வந்திருந்த குந்தா கெச்சிகட்டியை சேர்ந்த திரு. சிவராஜ் அவர்கள் , கோத்தகிரி ரோட்டரி திரு.தேவராஜ் அவர்களுடன் உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு
No comments:
Post a Comment