சூறாவளி பிரச்சாரம் :ஆ. ராசாவை ஆதரித்து உதகையில் உதயநிதி ஸ்டாலின் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 15 April 2024

சூறாவளி பிரச்சாரம் :ஆ. ராசாவை ஆதரித்து உதகையில் உதயநிதி ஸ்டாலின்


நீலகிரி மாவட்டம்  உதகை நகரில் 19/ 4/ 2024 அன்று நடக்க இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்ட பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு. ஆ.ராசா அவர்களை ஆதரித்து பரப்புரை செய்ய தமிழக விளையாட்டு துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்அவர்கள் கலந்து   கொண்டார் அவரை வரவேற்க கூட்டணிக் கட்சிகளாகிய காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மதிமுக விடுதலை சிறுத்தைகள் மக்கள் நீதி மையம் மனிதநேய மக்கள் கட்சி முஸ்லிம் லீக் திராவிட கழகம் போன்ற கட்சித் தொண்டர்கள்  இந்த பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு திமுகவிற்கு தங்களின் ஆதரவை தெரிவித்து   உதயநிதி ஸ்டாலினை வரவேற்றார்கள்.
            இந்த கூட்டத்தில் சிபிஐ சார்பில் கலந்து கொண்டவர்கள் மாவட்ட செயலாளர்   போஜராஜ்  ஏ ஐ டி யு சி மாவட்ட செயலாளர் மூர்த்தி, உதகை நகர செயலாளர் விஜயராஜ் மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணி   முத்தோரை கிளைச் செயலாளர் இருதயராஜ் பொருளாளர் ராமகிருஷ்ணன் மற்றும்   ஆஷ பணியாளர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட தோழர்கள் இதில் கலந்து கொண்டனர்.இந்தக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் வந்து ஆ ராசாவை ஆதரித்து அவருக்கு தங்களின் ஆதரவை அளிக்க மக்களிடம்  கேட்டுக் கொண்டார் .

தமிழக குரல்  செய்திகளுக்காக   உதகை தாலுக்கா செய்தியாளர்   விஜயராஜ்  மற்றும் நீலகிரி மாவட்ட  தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad